search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை பலி"

    • வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக துப்புரவு பணியாள ராக வேலை செய்து வருகின்றார்.
    • வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    முத்தூர், ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது30) .வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக துப்புரவு பணியாள ராக வேலை செய்து வருகின்றார். இவருக்கு அஷ்மிதா (4) மற்றும் 1½ வயதான தர்ஷினிதா என்று 2 மகள்கள் உள்ளனர். நேற்று காலை தர்ஷினிதா வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது குளியல் அறை அருகே வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வாளியில் தவறி விழுந்து விட்டார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நந்தினி அதே கிராமத்தில் தன்னார்வலராக வேலை செய்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.
    • குழந்தை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சத்ய சாயி மாவட்டம், கொண்டம்பள்ளி ஹரிபுரத்தை சேர்ந்தவர் ரமணா, இவரது மனைவி நந்தினி. தம்பதியின் மகன்கள் அன்விஷ் ரெட்டி, தன்விஷ் (வயது 2).

    நந்தினி அதே கிராமத்தில் தன்னார்வலராக வேலை செய்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    வாழ்க்கையில் விரக்தி அடைந்த நந்தினி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    தான் மட்டும் தற்கொலை செய்து கொண்டால் குழந்தைகள் அனாதையாகிவிடும் என்று எண்ணிய நந்தினி தனது 2 மகன்களுடன் ஊருக்கு வெளியே உள்ள கிணற்றிற்கு சென்றார்.

    தனது 2 வயது மகன் தன் விஷ்சை கிணற்றில் தூக்கி வீசினார். கிணற்றில் வீசப்பட்ட குழந்தை தண்ணீரில் மூழ்கிய படி உயிருக்கு போராடியது இதனை கண்ட நந்தினி தற்கொலை செய்து கொள்வதற்கு பயந்து கத்தி கூச்சலிட்டார்.

    அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தண்ணீரில் தத்தளித்த குழந்தையை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் குழந்தை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, கூலித்தொழிலாளி.
    • வீட்டின் முன்பக்க சுற்றுச்சுவர் திடீரென இடிந்து குழந்தை ஆதிரா, மகேந்திரன் ஆகியோர் மீது விழுந்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பிரேமா. இந்த தம்பதிக்கு ஆதிரா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை இருந்தது.

    நேற்று முன்தினம் இரவு குழந்தை ஆதிரா, தனது தாத்தா மகேந்திரனுடன் (வயது 50) வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது வீட்டின் முன்பக்க சுற்றுச்சுவர் திடீரென இடிந்து குழந்தை ஆதிரா, மகேந்திரன் ஆகியோர் மீது விழுந்தது. இதில் குழந்தை ஆதிரா பரிதாபமாக உயிரிழந்தது. மகேந்திரன் காயம் அடைந்தார்.

    • தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சமத்தியாவரபுரம் முல்லை தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் கனி ஸ்ரீ என்கிற 1 அரை வயது குழந்தை.

    இந்த குழந்தை வீட்டில் விளை யாடிக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • தண்ணீர் தொட்டிலில் மூழ்கி குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    கருங்கல் அருகே முள்ளூர் துறையை சேர்ந்தவர் சுஜின். இவருக்கும் குளச்சல் அருகே வாணியக்குடி பகுதியை சேர்ந்த மேரி வர்ஷா என்பவருக்கும் திருமணம் நடந்தது.

    இதையடுத்து சுஜின் மனைவி வீட்டில் வசித்து வந்தார். இவர்களுக்கு ஷகிப்சேன்டினோ (வயது 3) என்ற மகனும், 1½ வயதில் மகளும் இருந்தனர். சுஜின் மீன்பிடித் தொழில் செய்து வந்ததையடுத்து அவர் கடலுக்கு சென்று இருந்தார். வீட்டில் குழந்தைகள், மேரி வர்ஷா மற்றும் அவரது தாயார் இருந்தனர்.

    நேற்று மாலையில் மேரி வர்ஷா வெளியே சென்று இருந்தார். அப்போது அவரது மகன் ஷகிப்சேன்டினோ வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தார். வெளியே சென்றிருந்த மேரி வர்ஷா வீட்டிற்கு திரும்பியபோது மகனை காணவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடினார்கள். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீரென மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் குழந்தை ஷகிப்சேன்டினோவை அந்த பகுதி முழுவதும் தேடினர். எங்கு தேடியும் குழந்தையை காணவில்லை. இவர்களது வீட்டு பக்கத்தில் உள்ள வீடு ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கிரகப்பிரவேசம் நடந்தது. அந்த வீட்டின் கேட் திறந்த நிலையில் இருந்தது. எனவே ஷகிப்சேன்டினோ அங்கு சென்று இருக்கலாம் என்று சந்தேகத்தில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர்.

    அப்போது வீட்டின் முன் பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டியின் மூடி திறந்த நிலையில் காணப்பட்டது. தண்ணீர் தொட்டிக்குள் பார்த்தபோது ஷகிப்சேன்டினோ தண்ணீரில் மூழ்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை மீட்டு குளச்சலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதைகேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் குளச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஷகிப்சேன்டினோ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தண்ணீர் தொட்டிலில் மூழ்கி குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • குழந்தை திடீரென கால் இடறி சாலையில் விழுந்து விட்டது.
    • பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி சத்தியபிரியா(வயது22).

    இவர்களுக்கு 2½ வயதில் சுபிக்ஷா என்ற மகள் இருந்தார். சம்பவத்தன்று, சத்தியபிரியா தனது மகளுடன் அருகே உள்ள கடைக்கு சென்றார்.

    பின்னர் மகளை தூக்கி கொண்டு நடந்து வந்தார். அப்போது குழந்தை தன்னை இறக்கி விடுமாறும், தான் நடந்து வருவதாகவும் கூறியது. இருப்பினும் தாய் இறக்கி விட மறுத்தார்.

    ஆனால் குழந்தை தொடர்ந்து அடம்பிடித்ததால் சத்தியபிரியா மகளை இறக்கி விட்டார். குழந்தை நடந்து சென்று கொண்டிருந்தது. வீட்டின் அருகே வந்த போது குழந்தை திடீரென கால் இடறி சாலையில் விழுந்து விட்டது.

    இதில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியான சத்தியபிரியா குழந்தையை தூக்கி கொண்டு அருகே இருந்த கிளினிக்கு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் வீட்டிற்கு அழைத்து வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த குழந்தைக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு குழந்தை பார்த்த டாக்டர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    இதையடுத்து பெற்றோர் குழந்தையை அழைத்துக் ெகாண்டு, சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைகேட்டதும் பெற்றோர் கதறி அழுதனர். இது அங்கு இருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவர்களுக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் எதிர்பாராதவிதமாக இஷாந்த் தவறி விழுந்தான்.
    • படுகாயமடைந்த இஷாந்தை மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரம் நாட்டாமை தெருவை சேர்ந்தவர் சிவன்மாரி. இவர் ஏழை மாணவர்களும் ராணுவத்தில் சேருவதற்காக கடையநல்லூர் அருகே அச்சம்பட்டியில் இலவச ராணுவ பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.

    கடந்த 3-ந்தேதி சிவன்மாரி மனைவி கலா, மகன்கள் முகேஷ் (8) மற்றும் இஷாந்த் (5) ஆகியோர் ராணுவ பயிற்சி மையத்திற்கு சென்றிருந்தனர்.

    அப்போது அங்கு தனியாக விளையாடிக் கொண்டிருந்த இஷாந்த் அங்குள்ள மாணவர்களுக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தான். இதில் படுகாயமடைந்த இஷாந்தை மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து மதுரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த இஷாந்த் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

    இந்த சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி 3 வயது குழந்தை பலியானது.
    • பள்ளி வேன் மோதி குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள மேற்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் சீனுவாசன். நெடுஞ்சாலை துறை ஊழியர். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு தேஜஸ்வரன் (வயது 3) என்ற குழந்தை இருந்தது.

    இன்று காலை கிழக்கு ராமாபுரத்தில் உள்ள அவரது தாத்தா வீட்டில் இருந்த தேஜஸ்வரன், சாலையில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வேன் திடீரென தேஜஸ்வரன் மீது மோதியது.

    குழந்தையின் தலையில் பள்ளி வேன் சக்கரம் ஏறியதால் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதனை பார்த்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுது துடித்தனர்.

    விபத்து குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து குழந்தை தேஜஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பள்ளி வேன் மோதி குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • விளையாடிக்கொண்டிருந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை அடுத்த வெங்கட்ட கவுண்டனூர் பகுதி யைச் சேர்ந்தவர் கோபி, விவ சாயி. இவரது மனைவி சுபித்ரா. இவர்களின் மூன்றா வது குழந்தை கவுஷிக் (1 1/2 வயது) கோபியும், அவரது மனைவியும் நேற்று முன்தி னம் நிலத்துக்கு விவசாய பணிக்காக சென்றனர்.

    அப் போது குழந்தை கவுஷிக்கையும் உடன் அழைத்து சென்றிருந்தனர்.

    அங்கு கனவின், மனைவி இருவரும் விவசாய பணிகளை மேற்கொண்டிருந்தனர். விவசாய நிலத்தின் அரு கில் விவசாய பயன்பாட்டுக் காக தண்ணீர் தொட்டி உள்ளது. இதில் தண்ணீர் தேக்கி வைத்து நிலங்களுக்கு பாய்ச்சி வருகிறார்கள்.

    அந்தப் பகுதியில் குழந்தை கவுஷிக் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளான்.

    திடீரென குழந்தையை காணாததால் தேடிய போது தண்ணீர் தொட்டியில் மூழ்கிய நிலையில் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    உடனடியாக குழந்தையை மீட்டு பார்த்தபோது குழந்தை இறந்துவிட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழந்தை தண்ணீர் தொட் டியில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சுமார் 1 மணி நேரத்திறகு பிறகு தீயணைப்பு படையினர் மீட்டனர்.
    • டாக்டர்கள் பரிசோதித்த போது குழந்தை, ஏற்கனவே இறந்துவிட்டது என தெரியவந்தது.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள கொசமேட்டை சேர்ந்தவர் சபீர். கூலி தொழிலாளி. இவரது மகன் சபாஷ் (வயது3). நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த குழந்தை திடிரென மாயமானது.

    இதனால் பெற்றோர் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அப்போது வீட்டின் பின்புறம் உள்ள எள்ளூகுட்டை ஏரியில் குழந்தை மூழ்கி இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.

    இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கிருஷ்ணகிரி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து ஏரியில் குழந்தையை தேடினர்.

    சுமார் 1 மணி நேரத்திறகு பிறகு தீயணைப்பு படையினர் குழத்தையை அனைத்து மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை காவேரிப்பட்டினம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது குழந்தை, ஏற்கனவே இறந்துவிட்டது என தெரியவந்தது.

    இதுகுறிந்து, காவேரிப்பட்ணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது வீட்டு அருகே விளையாடி, கொண்டு இருந்த குழந்தை ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காய்ச்சலுக்கு குழந்தை பலியானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • குழந்தை இறந்தது தொடர்பாக திருப்பாளைவனம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    பொன்னேரி:

    சென்னையை அடுத்த பழவேற்காடு லைட்அவுஸ் குப்பத்தைச் சேர்ந்த 8 மாத குழந்தைக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென்று காய்ச்சல், வாந்தி-பேதி ஏற்பட்டது. இதையடுத்து அந்த குழந்தையை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் பழவேற்காடு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு போதிய மருந்து இல்லை என்று கூறி குழந்தை பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. காய்ச்சலுக்கு குழந்தை பலியானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே குழந்தைக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி பழவேற்காடு, பொன்னேரி அரசு மருத்துவமனை டாக்டர்களுடன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    குழந்தை இறந்தது தொடர்பாக திருப்பாளைவனம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உடலில் குறிப்பிடும்படியாக சுவாச பகுதியில் பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய ஒரு வகையை சேர்ந்தது.
    • ஒரு குழந்தைக்கு இருமல் மற்றும் ஜலதோஷம் பிடித்துவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் பரவி வரும் அடினோவைரசின் பாதிப்புக்கு குழந்தைகள் அதிக இலக்காகின்றனர். அவர்களில் பலர் உயிரிழந்து உள்ளனர்.

    இதனை தொடர்ந்து முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறும்போது,

    குழந்தைகள் யாரும் பயப்பட வேண்டாம். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என கூறியுள்ளார். அடினோவைரசின் பாதிப்புக்கு 19 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர் என கூறிய அவர், அவர்களில் 13 பேர் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவர், ஒரு குழந்தைக்கு இருமல் மற்றும் ஜலதோஷம் பிடித்துவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அந்த குழந்தைக்கு காய்ச்சல் பாதிப்பு எதுவும் காணப்பட்டால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டியது அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

    அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், இந்த அடினோவைரசானது, லேசானது முதல் கடுமையான பாதிப்புகளை உடலில், குறிப்பிடும்படியாக சுவாச பகுதியில் ஏற்படுத்த கூடிய ஒரு வகையை சேர்ந்தது. அது எந்த வயது குழந்தையையும் பாதிக்க கூடியது. புதிதாக பிறக்கும் மற்றும் இளம் குழந்தைகளிடையே அது பரவலாக காணப்படும்.

    கடுமையான பாதிப்பின்போது அறிகுறிகளாக, பொதுவான ஜலதோஷம் போன்ற பாதிப்பையும், காய்ச்சல், வறண்ட தொண்டை, நுரையீரல் பாதிப்பு, நிம்மோனியா, கண்கள் பிங்க் வண்ணத்தில் நிறம் மாறுதல், வாந்தி, குமட்டல், வயிற்று போக்கு உள்ளிட்ட வயிறு மற்றும் குடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட கூடும் என தெரிவித்து உள்ளது.

    ×